Thursday, January 15, 2009

இன்று பொங்கல்...


இன்று பொங்கல்...
ஊரெல்லாம் கொண்டாட்டம்...
தெருவெங்கும் உற்சாகம்...

கரும்பு நட்டு தோரணம் கட்டி
வீட்டின் வாசலில் கோலமிட்டு
மண் பானையில் பொங்கலிட்டு
தெருவே கூட
பொங்கியதும் கூவுவோம்
பொங்கலோ பொங்கலென்று...
எத்தனை சுகம் இந்த கிராமத்து பொங்கல்

நகரத்திலோ நரகம்...
தெரு வண்டியில் வரும் கரும்பு
காஸ் அடுப்பு, அதன் மேல் குக்கர்
அதனுள் பொங்கல், அதையும் சுற்றி ஒரு மஞ்சள் குலை
மனசுக்குள்ளேயே கூவுகிறோம்
பொங்கலோ பொங்கலென்று...
சத்தம் போட்டால் பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வருவானே!!!

இனி பக்கத்து வீட்டில்
ஒன்றாய் பார்க்க ஒலியும் ஒளியும் இல்லை
ஒன்று கூட உறவும் இல்லை
அங்கு தொலைக்காட்சி பெட்டி உள்ளது
ஆனால் உறவு தொல்லைகாட்சி ஆகிவிட்டதே...

வாழ்கையில் வேகம் கூடிவிட்டது
ஆனால் வாழ்வின் சுகங்கள் காணாமலே போய்விட்டது

No comments:

Post a Comment