Friday, January 16, 2009

சின்னஞ்சிறிய கவிதைகள் - 1

மாற்றம்...
மாற்றம் நிரந்தரமென்றால்
மரணத்தில் ஏன் மாற்றம் இல்லை?
மாற்றம் நிச்சயம்
ஆனால் மரணம் மட்டுமே நிரந்தரம்...


மக்கள்
மக்கள் மாக்கள் ஆனதேன்?
ஆறறிவு இருந்தும் ஐந்தறிவு ஜீவனம்
இரையை துரத்துவது போல் பணத்தை...
வந்த பாதையில் வெளிச்சமும் இல்லை
திரும்பி போக வழியும் இல்லை


வானவேடிக்கை
கூரையில் ஓட்டைகள்...
வீட்டிலிருந்தே எனக்கு தெரிந்தது வானவேடிக்கை...

No comments:

Post a Comment