Saturday, May 7, 2016

தாயுமாய் தான்!!!




நினைவிருகிறது
நீ கருவுற்ற அந்த நொடி
உயிர் வரை சிலிர்த்த அந்த நொடி

தாயாய் உன்னை பார்த்த போது
கண்கள் நிறைந்ததடி

ஊண் உருக்கி உயிர் உருக்கி
கருவில் சுமந்தாய்
ரணமாய் உடல் ஆனபோதும்
கவசமாய் காத்தாய்


ரத்தத்தை பாலாக்கி
இரவு பகல் பாராமல்
நீ பட்ட பாடு
அம்மாமா...
உன் உடலின் வலி
என் உயிரின் வலி

8 அகவைகள்
முடியும் தருணம்
இன்னும் அடை காக்க நீ

தாயாய் நீ காப்பதை
பார்க்கும் போது
ஒரு முறை உன் கருவாய்
இருக்க ஆசை

காலம் எனும் சக்கரத்தில்
ஓடும் நம் வாழ்க்கை
வருடங்கள் உருண்டோடிவிடும்
இன்றும் உன் கை பிடித்திருக்கிறேன்
என் தாரமாய்  மட்டும்மல்ல
தாயுமாய்  தான்!!!






Tuesday, April 26, 2016

எனதாய் அடைந்தேன்



விழிகளில் விழுந்தேன்
உயிரில் கரைந்தேன்
நினைவினில் மிதந்தேன்
கவிதையாய் வரைந்தேன்

கவிதையாய் வரைந்தேன்
 நிதம் உன்னை நினைந்தேன்
கண்களை மூடி
தவமாய் கிடந்தேன்

தவமாய் கிடந்தேன்
வரமாய் கிடைத்தாய்
மனதினில் புதைத்தேன்
கருவாய் சுமந்தேன்

கருவாய் சுமந்தேன்
உயிராய் வளர்த்தேன்
என்னவளே உன்னை
எனதாய் அடைந்தேன் 

Monday, April 25, 2016

உன்னில்...




உன் பார்வையில் காதல் கொண்டேன்
உன் ஸ்பரிசத்தில் மோகம் கொண்டேன்
உன் கண்களால் காமம் கொண்டேன்
உன்னை சேரும் வரை தாபம் கொண்டேன்

உன் சேர்க்கையில் யோகம் கண்டேன்
உன் நோக்கினில் போகம் கண்டேன்
உன் செய்கையில் வேகம் கண்டேன்
உன் எண்ணத்தில் விவேகம் கண்டேன்

உன் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு ஒலியிலும்
எண்ணற்ற எண்ணற்ற
காரணம் கண்டேன்

என்றும் உன்னுடன் நானே நிற்பேன்
உன் வெற்றிக்கு துணையாய் என்றும் நிற்பேன்
கனவிலும் நினைவிலும் அருகில் நிற்பேன்
நித்தமும் பிரியாமல் காவல் நிற்பேன்


Saturday, April 23, 2016

மீண்டும் உனக்காக...



எத்தனை எத்தனை நாட்கள்
உனக்காக நான் எழுதி
எத்தனை எத்தனை நாட்கள்
உனக்காக நான் உருகி

நினைவுகள் நிறைந்திருந்தாலும்
ஏனோ பேனாவை கை தொடவில்லை

தவறு தான் என் கண்ணே
மனதில் உள்ளதை வார்த்தையாய் வார்காவிட்டால்
நினைத்துத்தான் என்ன பயன்

இதோ மீண்டும் உனக்காக
ஒரு காதல் காவியம்
நம் காதல் காவியம்

13 அகவைகள் கடந்து வந்த
நம் காதல் சாசனம்

இப்படிக்கூட காதலிக்க முடியும் என
உன்னை பார்த்துத்தான் அறிந்து கொண்டேன்
என்னை இப்படி கூட காதலிக்க முடியும் என
உன்னை பார்த்துத்தான் புரிந்து கொண்டேன்

ஒவ்வொரு நொடியும் உன் காதலால் வாழ்கிறேன்
ஒவ்வொரு கணமும் உன் காதலால் கரைகிறேன்


உன் பிறந்தநாள் இன்று

நம் காதல் மீண்டும் பிறந்ததாய் உரைக்கிறேன்

பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
உன் பல கோடி ஆசைகள் நிறைவேறவேண்டும்
வழித்துணையாய் நான் இருப்பேன்
வழிநெடுக்க நான் சுமப்பேன்
உன்னை, மனத்திலும்
உன் சிரிப்பை, கண்ணிலும்
உன் வலியை, என் முழுவதும்

என் கண்ணே கண்மணியே
முத்தே முத்தாரமே
என் கவிதையின் கருவே
செல்லமாய் உன்னை கொஞ்சி
உன்னுடன் விளையாட மனம் விரும்புதே
என் உயிரின் ஆதாரமே
உன்னால் நான் வாழ்கிறேன்... நிதமும் நித்தமும்