Saturday, May 7, 2016

தாயுமாய் தான்!!!




நினைவிருகிறது
நீ கருவுற்ற அந்த நொடி
உயிர் வரை சிலிர்த்த அந்த நொடி

தாயாய் உன்னை பார்த்த போது
கண்கள் நிறைந்ததடி

ஊண் உருக்கி உயிர் உருக்கி
கருவில் சுமந்தாய்
ரணமாய் உடல் ஆனபோதும்
கவசமாய் காத்தாய்


ரத்தத்தை பாலாக்கி
இரவு பகல் பாராமல்
நீ பட்ட பாடு
அம்மாமா...
உன் உடலின் வலி
என் உயிரின் வலி

8 அகவைகள்
முடியும் தருணம்
இன்னும் அடை காக்க நீ

தாயாய் நீ காப்பதை
பார்க்கும் போது
ஒரு முறை உன் கருவாய்
இருக்க ஆசை

காலம் எனும் சக்கரத்தில்
ஓடும் நம் வாழ்க்கை
வருடங்கள் உருண்டோடிவிடும்
இன்றும் உன் கை பிடித்திருக்கிறேன்
என் தாரமாய்  மட்டும்மல்ல
தாயுமாய்  தான்!!!