Tuesday, December 23, 2008

பக்கத்தில் நீ...


திரும்பி பார்த்தேன்...
வாழ்கையை புரட்டி பார்த்தேன்...

தினமும் மூன்று கிலோமீட்டர் பயணம்... வண்டியை தள்ளி கொண்டு
இருவது கிலோமீட்டர் மாடி இரயில் சவாரி... இருட்டும் வரை
பின் கடற்கரை மண்ணில் கால் பதிப்பு
விண்மீன்கள் முன்று பார்த்து புன்சிரிப்பு...
முடிந்தால் பஜ்ஜி கடை இல்லையேல் பாணி பூரி
கண்டிப்பாக கூட உன் கை விரல்...

கை கோர்த்து கால் கடுக்க நடை பயணம்
சற்றும் சோர்வே இல்லாமல்...

காதல் வந்து விட்டால் வாழ்க்கையில் சுவை கூடித்தான் போகின்றது

அன்றைக்கும் இன்றைக்கும் நிரம்ப மாற்றம் இல்லை
சில சுமைகள் மட்டும் கூடி விட்டன
ஆனால் வாழ்க்கை இன்னமும் ருசிக்கத்தான் செய்கிறது

காரணம்...
இன்னமும் உன் காதல்
பக்கத்தில் நீ...

No comments:

Post a Comment