Wednesday, January 21, 2009

நீ...


பஞ்ச பூதங்களில் யாவும் அடக்கம்...
நான் மட்டும் உன்னில்
ஈசனின் இடப்பாகமாம் ஈஸ்வரி...
நீயோ என் அங்கமெல்லாம்

நீயின்றி நானில்லை
உன் நினைவின்றி நொடியில்லை
வாழ்கையெனும் போர்க்களத்தில்
நீ பக்கம் இருந்தால் பயமும் இல்லை...

எனை தீண்டும் காற்றாய் நீ...
எனை தாங்கும் பூமியாய் நீ..
எனை சுடும் தீயாய் நீ...
அதை ஆற்றும் நீராய் நீ...
யாதும் நீ...
என்னவளே...
என் தொடு வானம் நீ...
என் பஞ்ச பூதம் நீ!!!

No comments:

Post a Comment