Saturday, April 23, 2016

மீண்டும் உனக்காக...



எத்தனை எத்தனை நாட்கள்
உனக்காக நான் எழுதி
எத்தனை எத்தனை நாட்கள்
உனக்காக நான் உருகி

நினைவுகள் நிறைந்திருந்தாலும்
ஏனோ பேனாவை கை தொடவில்லை

தவறு தான் என் கண்ணே
மனதில் உள்ளதை வார்த்தையாய் வார்காவிட்டால்
நினைத்துத்தான் என்ன பயன்

இதோ மீண்டும் உனக்காக
ஒரு காதல் காவியம்
நம் காதல் காவியம்

13 அகவைகள் கடந்து வந்த
நம் காதல் சாசனம்

இப்படிக்கூட காதலிக்க முடியும் என
உன்னை பார்த்துத்தான் அறிந்து கொண்டேன்
என்னை இப்படி கூட காதலிக்க முடியும் என
உன்னை பார்த்துத்தான் புரிந்து கொண்டேன்

ஒவ்வொரு நொடியும் உன் காதலால் வாழ்கிறேன்
ஒவ்வொரு கணமும் உன் காதலால் கரைகிறேன்


உன் பிறந்தநாள் இன்று

நம் காதல் மீண்டும் பிறந்ததாய் உரைக்கிறேன்

பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
உன் பல கோடி ஆசைகள் நிறைவேறவேண்டும்
வழித்துணையாய் நான் இருப்பேன்
வழிநெடுக்க நான் சுமப்பேன்
உன்னை, மனத்திலும்
உன் சிரிப்பை, கண்ணிலும்
உன் வலியை, என் முழுவதும்

என் கண்ணே கண்மணியே
முத்தே முத்தாரமே
என் கவிதையின் கருவே
செல்லமாய் உன்னை கொஞ்சி
உன்னுடன் விளையாட மனம் விரும்புதே
என் உயிரின் ஆதாரமே
உன்னால் நான் வாழ்கிறேன்... நிதமும் நித்தமும் 

No comments:

Post a Comment