Friday, April 25, 2014

இயற்கையின் நியதி... வாழ்வின் விதி...

களைத்து போய் விட்டேன்
களை இழந்து கலை இழந்து
கலைந்தும் போய் விட்டேன்

ஒவ்வொரு அடியும் சம்மட்டியால்
முதுகில் நூறு முகத்தில் நூறு
அடியின் வலி தான் தெரியும் முன்னே
அடுத்த அடியும் விழுகிறதே

சிரிக்கத்தான் நினைக்கிறன்
அறியாமல் அழுகிறேன்
எதிர்க்க தான் முயல்கிறேன்
ஒடிந்தே போகிறேன்

அடுத்த அடிதான் வைக்கும் முன்னே
அடித்தே நொறுக்கும் காரணம் என்ன ?

தெளிவை தேடி ஓடும்போது
நொடியில் வந்தது அறிவில் ஞானம்
புது மனிதனாய் பிறந்து விட்டேன்
விட்டதை பிடிக்க எத்தனானேன்

அத்தனையும் நன்மைக்கென நினைக்கும் நெஞ்சம்
போராடி பார்க்க தான் துடிக்கிறதே
படித்த புத்தகமும் பாடமும்  சேர்ந்து
வழித்துணை தான் ஆகியதே

தோல்வியின் வலியதை உணர்ந்தவன் மட்டுமே
வெற்றின் சுவையை உணருகிறான்
வெற்றியின் சுவையை உணரும் போது
வாழ்கையின் அர்த்தம் உணருகிறான்

இறக்கம் இல்லாத மனிதன் இல்லை
எற்றம் காணாத வாழ்க்கை இல்லை
விழுவதும் எழுவதும் இயற்கையின் நியதி
உணர்ந்து விட்டேன் இந்த வாழ்வின் விதி

மோதி பார்க்க தயாராகி நிற்கிறேன்
மலையையும் குடைய எத்தமாய் இருக்கிறேன்
அலைகடல் தாண்டியும் வெற்றியை தேட
திட் டத்துடன் தான் இறங்குகிறேன்

பராசக்தி !!! உன் சக்தி கொடு
பராசக்தி !!! வெல்ல யுக்தி கொடு
பராசக்தி !!! பராசக்தி !!! பராசக்தி !!!





No comments:

Post a Comment