Monday, April 25, 2016

உன்னில்...




உன் பார்வையில் காதல் கொண்டேன்
உன் ஸ்பரிசத்தில் மோகம் கொண்டேன்
உன் கண்களால் காமம் கொண்டேன்
உன்னை சேரும் வரை தாபம் கொண்டேன்

உன் சேர்க்கையில் யோகம் கண்டேன்
உன் நோக்கினில் போகம் கண்டேன்
உன் செய்கையில் வேகம் கண்டேன்
உன் எண்ணத்தில் விவேகம் கண்டேன்

உன் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு ஒலியிலும்
எண்ணற்ற எண்ணற்ற
காரணம் கண்டேன்

என்றும் உன்னுடன் நானே நிற்பேன்
உன் வெற்றிக்கு துணையாய் என்றும் நிற்பேன்
கனவிலும் நினைவிலும் அருகில் நிற்பேன்
நித்தமும் பிரியாமல் காவல் நிற்பேன்


No comments:

Post a Comment