Sunday, November 18, 2018

நமக்கென ஒரு கவிதை

உனக்கென ஒரு கவிதை
நீண்ட நாட்களுக்கு பிறகு
நமக்கென ஒரு கவிதை

ம்ம்ம்
கவிதை
வாழ்க்கையின் ஓட்டத்தில்
ஓட்டத்தின் வேகத்தில்
வேகத்தின் கவனத்தில்
கவனமின்றி மறந்து விட்ட பலவற்றில் ஒன்று

இன்று நம் நாள் என்றதும் மறுபடியும்...
நொடி பொழுது கூட யோசிக்காமல் மறுபடியும்
தடை தாண்டி மடை தாண்டி வரும் கவிதை
உனக்கென ஒரு கவிதை... நமக்கென ஒரு கவிதை

வருடங்களின் கணக்குகளை நான் மறந்து கூட விட்டேன்
அனால் இன்றும்...
நொடிப்பொழுதும் மாறாத அதே காதலுடன்
இம்மியும் மறையாத அதே நேசத்துடன்

இத்தனை வருடத்தில் எத்தனை சண்டைகள்
சண்டைகள் யாவும் ஊடலாய் மறைய
அத்தனை அத்தனை காதல் நம்மிடம்

மாறாத நம் காதல் குறையாத நம் நட்பு
ஊரார் ஊற்றார் அனைவரும் அறிவார்
அத்தனை அத்தனை காதல் நம்மிடம்

வாழ்ந்த  வாழ்க்கை போதாது எனக்கு
இன்னும் சில நூறு ஆண்டுகள் வேண்டும் உன்னுடன்
வேண்டிக்கொள்கிறேன்
இருக்கின்ற  கடவுளிடம்... இல்லாத கடவுளிடம்

உனக்கென ஒரு கவிதை
நீண்ட நாட்களுக்கு பிறகு
நமக்கென ஒரு கவிதை

No comments:

Post a Comment